Thursday, May 27, 2010

(naan rasitthe kavithaigal)


மறுபக்கம்... !!


எனதன்பின்
மிக மெல்லிய
விரல்களை
ஒடித்துச் சிதைத்து,
உன் நாவின்
சுவைக்கென
உருமாற்றுகிறாய்.

வக்கிரங்கள்
நிமித்தம்
வழிந்தோடும்
என் ரத்தங்கள் குறித்து,
உனக்கு வருத்தமேதுமில்லை.

குழந்தைப் பேறுக்கு பின்
தாய் என்பதனை
சதா எனக்குணர்த்தும்
உன்னால்
நீ தந்தை
என்பது மட்டும்,
ஏனோ
மறந்து போகிறது.

என்
ஆடை அலமாரியில்
எப்போதும்
ஒளிந்து கொண்டிருக்கும்
உன்
சந்தேகங்களின்
கண்களுக்கு
ஏனோ
தெரிவதில்லை
ஒரு போதும்
உன்
நிர்வாணம் பற்றி...

No comments:

Post a Comment